யார் யாசிக்கலாம்
யார் யாசிக்கலாம் ? கபீஸா பின் முகாரிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய ) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுறுப்பேற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"தர்மப்படி பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள் : கபீஸா ! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்கலாம் அனுமதி உண்டு. 1. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்க்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு யாசிப்பதை நிறுத்திஇக்கொள்ளை வேண்டும். 2. இரண்டாமவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் வாழ்க்கையின் அவசியத்தை தேவையை அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். 3.மூன்றாமவர் 'வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி ) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, "இன்ன மனிதர் வறுமைக்கு ...