Posts

Showing posts from July, 2018

வானவர்களின் துஆவை பெற...

*மலக்குகளின் துஆக்களை பெறுபவர்கள் யார்?* *தர்மம் செய்பவர்* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர்.  அவ் விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதி பலனை அளித்திடுவாயாக!''  என்று கூறுவார். மற்றொருவர் அல் லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறு வார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : புகாரி 1442) தர்மம் செய்பவர்கூட, தான் தர்மம் செய்த பிறகு இப்படியொரு துஆவை செய்திருக்க மாட்டார். அப்படியொரு கருத்தாழமிக்க துஆவை மலக்குகள் தினம் தினம் செய்கிறார்கள். மலக்குமார்களின் துஆவை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தர்மம் செய்பவர் மிகமிக குறைவு என்றே கூற வேண்டும். இக்காலகட்டத்தில் பள்ளி வாசலுக்கு ஒரு மின்விசிறியை அன்பளிப்பு செய்தால்கூட அதில் தனது பெயரை வலுக்கட்டாயமாக பொறித்து விடுகிறார்கள். இன்னார்தான் இதை அன்பளிப்பு செய்தார் என்ற முகஸ்துதிக்காகவே இவ்வாறு செய்கிறார்கள். இதை தவிர்த்து தூய எண்ணத்துட...