குர்ஆனைக் கொண்டு நம் உள நோயைக் குணப்படுத்துவோம். **************** நபி பேரர் இமாம் ஜஃபர் ஸாதிக் (ரஹ்) சொல்கிறார்கள்: தனக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என அச்சப்படும் நிலையில் حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ ஹஸ்புனல்லாஹ் வநிஃமல் வகீல் “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” (அல்குர்ஆன் : 3:173) என சொல்லாத ஒருவனைக் கண்டு நான் வியப்படைகிறேன், ஏனென்றால் அந்த வசனத்தின் தொடர்ச்சியாக அவ்வாறு சொன்னவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான், فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. (அல்குர்ஆன் : 3:174) கடந்த கால செயல்களினால் துக்கப்படும் ஒருவன் لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாழிமீன் “உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையான...