இஸ்லாத்தின் பார்வையில்... சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
மனிதன் தொடங்கி உலகில் நாம் காணும் சகல படைப்புகளும் இறைவனுக்கு மட்டுமான அடிமைகள் ஆவார்கள். அது தவிர்த்து மனிதனுக்கு மனிதன் அடிமை என்பதை உலகின் எல்லா மதங்களும் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. மனிதநேயமும், மனிதாபிமானமும் ஆன்மிகப் பாதையின் படிக்கட்டுகள். மனிதனின் தன்மானத்துக்கு எதிரான செயல்கள் அனைத்தும் மனிதநேயத்தை தகர்க்கும் செயல்களாகும் என்கிறது இஸ்லாம். நடைபாதையில் கிடக்கின்ற சிறிய கற்களை, முற்களை, எலும்புகளை, கண்ணாடி துண்டுகளை, மனிதனுக்கு நோவினை தரும் அனைத்தையும் அகற்றுவது மனிதநேயமிகு செயல்கள் என்பது மட்டுமல்ல, ஒரு முஸ்லீம் ஏற்றுள்ள இறை நம்பிக்கையின் பரிபூரணத்திற்கான சேவைகள் என நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அடிமையும், அடிமைத்தனமும் நம்மை படைத்து பாதுகாக்கிற எஜமானன் ஒருவனாகிய இறைவனின் புனிதம் நிறைந்த தெய்வாதீனமான சன்னிதானத்திற்கு மட்டுமே உரித்தானதாகும். மாறாக சாதி, மதம், இனம், நிறம், மொழி, வயது, மற்றும் செல்வாக்கு போன்ற பாகுபாடுகளை மையப்படுத்திய அடிமைத்தனம் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை இஸ்லாம் தான் தோன்றிய காலம் தொட்டே உலகிற்கு உரக்கச் சொல்லி வருகிறது....