சுப்ஹு தொழுகையின் அவசியம்! பஜ்ர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள். ஆண்கள் அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா? அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” நூல் : அபூதாவூத் அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது. ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு பட...
Posts
Showing posts from April, 2016
இதுதான் زهد என்கிற தன்மை
- Get link
- X
- Other Apps
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) فقد بعث إليه مروان بن الحكم مائة دينار ذهباً ، فلما كان الغد أرسل إليه يقول: إن خادمي غلط فأعطاك الدنانير،وأنا لم أردك بها،وإنما أردت غيرك،فسقط في يد أبي هريرة وقال: أخرجتها في سبيل ولم يبت عندي منها دينار ،فإذا خرج عطائي فخذها منه . وإنما فعل ذلك مروان ليختبره، فلما تحرى الأمر وجده صحيحاً . (الكتاب: صور من حياة الصحابة) மர்வான் இப்னுல் ஹிகம் (அன்றைய ஆட்சியாளர்)அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களுக்கு நூறு தீனார் தங்க காசுகளை அனுப்பி வைத்தார். (மறுநாள்) காலையில் இவ்வாறு ஒரு நபரிடம் கூறி அனுப்பிவைத்தார் " என்னுடைய பணியாளர் தவறுதலாக உங்களிடம் தங்கக் காசுகளை கொடுத்துவிட்டார்.உங்களுக்கு அவற்றை (தருவதற்கு) நான் நாடவில்லை.வேறொருவருக்குத்தான் (தருவதற்கு) நாடினேன்.அது அபூ ஹுரைரா(ரலி) வாகிய தங்களின் கையிலே வந்துவிட்டது". அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள் " அவைகளை(தங்க காசுகளை) அல்லாஹ்வின் பாதையிலே செலவழித்துவிட்டேன். அந்த தங்க காசுகளில் ஒரு காசுகூட (நேற்றைய) இரவில் என்னிடம் இருக்கவில்லை. என்னுடைய ஊதியம் வரும்போது அதிலிருந்து அவைகளை (தங்க கா...