Posts

வானவர்களின் துஆவை பெற...

*மலக்குகளின் துஆக்களை பெறுபவர்கள் யார்?* *தர்மம் செய்பவர்* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர்.  அவ் விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதி பலனை அளித்திடுவாயாக!''  என்று கூறுவார். மற்றொருவர் அல் லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறு வார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : புகாரி 1442) தர்மம் செய்பவர்கூட, தான் தர்மம் செய்த பிறகு இப்படியொரு துஆவை செய்திருக்க மாட்டார். அப்படியொரு கருத்தாழமிக்க துஆவை மலக்குகள் தினம் தினம் செய்கிறார்கள். மலக்குமார்களின் துஆவை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தர்மம் செய்பவர் மிகமிக குறைவு என்றே கூற வேண்டும். இக்காலகட்டத்தில் பள்ளி வாசலுக்கு ஒரு மின்விசிறியை அன்பளிப்பு செய்தால்கூட அதில் தனது பெயரை வலுக்கட்டாயமாக பொறித்து விடுகிறார்கள். இன்னார்தான் இதை அன்பளிப்பு செய்தார் என்ற முகஸ்துதிக்காகவே இவ்வாறு செய்கிறார்கள். இதை தவிர்த்து தூய எண்ணத்துட...

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

கேள்வி : ஸஜ்தா திலாவத் பற்றிய குறிப்புகள் கூறுக? தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தா செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம். இந்த 14 வசனங்களும் ஹதீஸ்களின் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இமாம்கள் வகுத்து தந்திருக்கிறார்கள் அந்த வசனங்கள் பின் வருமாறு آيات السجود👇 1) إِنَّ الَّذِينَ عِندَ رَبِّكَ لاَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ سورة الأعراف 2)  وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُمْ بِالْغُدُوِّ وَالْآَصَالِ  (سورة الرعد ) 3)  وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ  يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْم...
சுப்ஹு தொழுகையின் அவசியம்! பஜ்ர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள். ஆண்கள் அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா? அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!”                           நூல் : அபூதாவூத் அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது. ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு பட...

இதுதான் زهد என்கிற தன்மை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  فقد بعث إليه مروان بن الحكم مائة دينار ذهباً ، فلما كان الغد أرسل إليه يقول: إن خادمي غلط فأعطاك الدنانير،وأنا لم أردك بها،وإنما أردت غيرك،فسقط في يد أبي هريرة وقال: أخرجتها في سبيل ولم يبت عندي منها دينار ،فإذا خرج عطائي فخذها منه . وإنما فعل ذلك مروان ليختبره، فلما تحرى الأمر وجده صحيحاً . (الكتاب: صور من حياة الصحابة) மர்வான் இப்னுல் ஹிகம் (அன்றைய ஆட்சியாளர்)அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு ) அவர்களுக்கு நூறு தீனார் தங்க காசுகளை அனுப்பி வைத்தார். (மறுநாள்) காலையில் இவ்வாறு  ஒரு நபரிடம் கூறி அனுப்பிவைத்தார் " என்னுடைய பணியாளர் தவறுதலாக உங்களிடம் தங்கக் காசுகளை கொடுத்துவிட்டார்.உங்களுக்கு அவற்றை (தருவதற்கு) நான் நாடவில்லை.வேறொருவருக்குத்தான் (தருவதற்கு) நாடினேன்.அது அபூ ஹுரைரா(ரலி) வாகிய தங்களின் கையிலே வந்துவிட்டது". அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள் " அவைகளை(தங்க காசுகளை) அல்லாஹ்வின் பாதையிலே செலவழித்துவிட்டேன். அந்த தங்க காசுகளில் ஒரு காசுகூட (நேற்றைய) இரவில் என்னிடம் இருக்கவில்லை. என்னுடைய ஊதியம் வரும்போது அதிலிருந்து அவைகளை (தங்க கா...
Image
கண் அல்லாஹ் வழங்கிய அருட்கொடை நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று இயங்குகிறது . ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண்மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’எனப்படுகிறது. நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளி...
"உண்பதற்க்கு காத்திருப்போர் சாப்பாட்டுப் பாத்திரத்தை (நோக்கி) பாய்வதைப் போன்று மற்ற சமூகத்தினர் என்னுடைய சமுதாயத்தவர்கள் மீது பாய்ந்து விடும் காலம் வரும்" என்று ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! அந்த காலகட்டதில் மற்ற சமுகத்தினர் ஒன்றுபட்டு நம்மைத்தாக்கி, நம்மை விழுங்கிவிடுவார்களோ, என்று அச்சப்படும் வகையில் நம்முடைய சமுதாயம் எண்ணிகையில் மிகவும் குறைவாக ஆகிவிடுமோ ?" "இல்லை ! அப்போது நீங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கமாட்டீர் கள். மாறாக வெள்ளத்தில் அடித்து வரும் நுரையைப் போன்று நீங்கள் அப்போது மதிப்பற்றவர்களாக ஆகிவிடுவிர்கள் ! உங்களைக் குறித்து மதிப்பச்சம் (மற்றவர்களிடம் ) இல்லாது போகும். கோழைத்தனமும், தைரியமின்மையும் உங்கள் உள்ளத்தில் குடி கொண்டுவிடும்." அப்போது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! இந்த பலகீனம் எங்களிடம் ஏற்படுவதற்க்கு காரணம் என்ன ? " இதற்க்கு காரணம் இதுவே ! நீங்கள் உலகமோகத்தில் முழ்கி விடுவீர்கள். மேலும், மரனத்தை விட்டு ஓடுவீர்கள்.மேலும் அதனை வெறுக்கத் தொடங்குவீர்கள் !...
மூட்டு வலிகளுக்கு நபிமொழி மருத்துவம்... www.abu_mahira@yahoo.com இன்று ஆண்களிலும், பெண்களிலும் அதிகமானவர்கள் இந்த மூட்டு வலியினால் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நபிமொழியைப் பின்பற்றலாமே ! "அத்திப்பழம் சாப்பிடுங்கள். 'சொர்கத்திலிருந்து இறங்கிய பழம்' ஒன்று உண்டென்றால், அது அத்திப்பழமேயாகும். சொர்கத்துப் பழங்களில் விதை கிடையாது. (அத்திப்பழமும் அப்படியே) எனவே, அதைச் சாப்பிடுங்கள். அது மூலத்தைப் போக்குகிறது; மூட்டு வலிகளை நீக்குகிறது" என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : அபூதர் (ரழி) ஆதாரம் : கன்ஜுல் உம்மால் : 28276