"உண்பதற்க்கு காத்திருப்போர் சாப்பாட்டுப் பாத்திரத்தை (நோக்கி) பாய்வதைப் போன்று மற்ற சமூகத்தினர் என்னுடைய சமுதாயத்தவர்கள் மீது பாய்ந்து விடும் காலம் வரும்" என்று ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! அந்த காலகட்டதில் மற்ற சமுகத்தினர் ஒன்றுபட்டு நம்மைத்தாக்கி, நம்மை விழுங்கிவிடுவார்களோ, என்று அச்சப்படும் வகையில் நம்முடைய சமுதாயம் எண்ணிகையில் மிகவும் குறைவாக ஆகிவிடுமோ ?" "இல்லை ! அப்போது நீங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கமாட்டீர்கள். மாறாக வெள்ளத்தில் அடித்து வரும் நுரையைப் போன்று நீங்கள் அப்போது மதிப்பற்றவர்களாக ஆகிவிடுவிர்கள் ! உங்களைக் குறித்து மதிப்பச்சம் (மற்றவர்களிடம் ) இல்லாது போகும். கோழைத்தனமும், தைரியமின்மையும் உங்கள் உள்ளத்தில் குடி கொண்டுவிடும்." அப்போது ஒருவர் கேட்டார் : " இறைத்தூதர் அவர்களே ! இந்த பலகீனம் எங்களிடம் ஏற்படுவதற்க்கு காரணம் என்ன ? " இதற்க்கு காரணம் இதுவே ! நீங்கள் உலகமோகத்தில் முழ்கி விடுவீர்கள். மேலும், மரனத்தை விட்டு ஓடுவீர்கள்.மேலும் அதனை வெறுக்கத் தொடங்குவீர்கள் !"
ஆதாரம் : அபூதாவூது
ஆதாரம் : அபூதாவூது
Comments
Post a Comment