அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை...
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺑﺎﺩﺭﻭا ﺑﺎﻷﻋﻤﺎﻝ ﺳﺒﻌﺎ ﻫﻞ ﺗﻨﻈﺮﻭﻥ ﺇﻻ ﺇﻟﻰ ﻓﻘﺮ ﻣﻨﺲ، ﺃﻭ ﻏﻨﻰ ﻣﻄﻎ، ﺃﻭ ﻣﺮﺽ ﻣﻔﺴﺪ، ﺃﻭ ﻫﺮﻡ ﻣﻔﻨﺪ، ﺃﻭ ﻣﻮﺕ ﻣﺠﻬﺰ، ﺃﻭ اﻟﺪﺟﺎﻝ ﻓﺸﺮ ﻏﺎﺋﺐ ﻳﻨﺘﻈﺮ، ﺃﻭ اﻟﺴﺎﻋﺔ ﻓﺎﻟﺴﺎﻋﺔ ﺃﺩﻫﻰ ﻭﺃﻣﺮ
"ஏழு விஷயங்கள் ஏற்படும் முன், நற்செயல்களை விரைவாக செய்யுங்கள்.
1) மறதியை ஏற்படுத்தும் வறுமை.
2) அநீதம் செய்யத் தூண்டும் செல்வம்.
3) மோசமான நோய்.
4) பேச்சில் தடுமாற்றம் ஏற்படும் முதுமை.
5) திடீர் மரணம்.
6) எதிர்பார்க்கப்படும் தஜ்ஜால், (மறைவானவற்றில் மிகப்பெரும் தீமை இவனே)
7) மறுமை தீர்ப்பு நாள் ஆகிய இந்த ஏழைத் தவிர, வேறொன்றையும் எதிர்பார்த்திருக்காதீர்கள்.(விரைந்து) நற்செயல் செய்யுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல் : திர்மிதீ 2306
1) மறதியை ஏற்படுத்தும் வறுமை.
2) அநீதம் செய்யத் தூண்டும் செல்வம்.
3) மோசமான நோய்.
4) பேச்சில் தடுமாற்றம் ஏற்படும் முதுமை.
5) திடீர் மரணம்.
6) எதிர்பார்க்கப்படும் தஜ்ஜால், (மறைவானவற்றில் மிகப்பெரும் தீமை இவனே)
7) மறுமை தீர்ப்பு நாள் ஆகிய இந்த ஏழைத் தவிர, வேறொன்றையும் எதிர்பார்த்திருக்காதீர்கள்.(விரைந்து) நற்செயல் செய்யுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல் : திர்மிதீ 2306
இந்த ஹதீஸை நன்கு சிந்தித்துப் பாருங்கள். ஒரு உண்மை புரியும்.அதாவது இந்த ஏழு நிலைமைகள் ஏற்பட்டால் மனிதன் நன்மை செய்யவேண்டும், என்று நினைத்தாலும் கூட முடியாது.இன்னும் அதிகமான மன உளைச்சலுக்கு மனிதன் ஆளாகுவான் என்பதையும் இந்த ஹதீஸில் கூறப்பட்டு இருக்கிறது.அல்லாஹ் அந்த நிலமைகளை விட்டும் நம்மை பாதுகாத்து, அதற்கு முன்பே நல்லறங்கள் செய்ய உதவி செய்வானாக!
Comments
Post a Comment