அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை...



அன்று சொன்னவை என்றும் அர்த்தமுள்ளவை...

    عمرو بن شعيب، عن أبيه، عن جدهِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُول الله صلى الله عليه وسلم: ((مُرُوا أوْلادَكُمْ بِالصَّلاةِ وَهُمْ أبْنَاءُ سَبْعِ سِنينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا، وَهُمْ أبْنَاءُ عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ في المضَاجِعِ)). حديث حسن رواه أَبُو داود بإسناد حسن. 

       "உங்களின் குழந்தைகளை, அவர்கள் ஏழு வயதாகும் சமயம் தொழும்படி ஏவுங்கள்.அவர்கள் பத்து வயது ஆகும் போது, இதற்காக அவர்களை (லேசாக) அடியுங்கள். மேலும் அவர்களுக்கிடையே படுக்கைகளைப் பிரித்துப் போடுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அம்ர் இப்னு ஷுஐப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல் : அபூதாவூது 495 

இந்த ஹதீஸில் நமது குழந்தைகளை எப்படி பராமரிக்கவேண்டும் என்கிற அழகிய வழிமுறையை இறைத்தூதர், நமது தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் மூன்றாவது விஷயத்தில் நாம் நமது அறிவைப் பயன்படுத்துகிறோம்.இது தவறானது. அல்லாஹ்வும், அவனின் தூதரும் சொல்லியதைவிடாவா? நாம் சிறந்ததை சொல்லப்போகிறோம் அல்லது செய்யப்போகிறோம்.கண்டிப்பாக இல்லை. எனவே ஆண்பிள்ளை தந்தையோடும், பெண்பிள்ளை தாயோடும் தனித்தனியாக படுப்பது சிறந்த வழியாகும். இதோ இந்த குர்ஆன் வசனத்தையும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் படியுங்கள்.எதற்காக இப்படி சொல்லப்பட்டது என்பது புரியும்.

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنكُمْ ثَلَاثَ مَرَّاتٍ ۚ مِّن قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ الظَّهِيرَةِ وَمِن بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ۚ ثَلَاثُ عَوْرَاتٍ لَّكُمْ ۚ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ ۚ طَوَّافُونَ عَلَيْكُم بَعْضُكُمْ عَلَىٰ بَعْضٍ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿24:58﴾
24:58. நம்பிக்கையாளர்களே! உங்களுடைய அடிமைகளும், உங்களில் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்களில்) உங்களிடம் (வருவாராயின் உங்களுடைய) அனுமதியை மூன்று தடவைகள் அவர்கள் கோரவேண்டும். (அந்த நேரங்களாவன:) "ஃபஜ்ரு" தொழுகைக்கு முன்னரும் (படுக்கைக்காக உங்கள் மேல் மிச்சமான) ஆடைகளைக் களைந்திருக்கக்கூடிய "ளுஹர்" வேளையிலும், "இஷா" நேரத்தில் தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்) மூன்று நேரங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவைகளைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள் மீது குற்றமல்ல. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர் களாகவும், உங்களில் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதனாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை.) இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?