நல்லோர்களின் மாண்பு
كان التابعيُّ الجليل إبراهيم النخعيّ - رحمه الله - أعور العين ، وكان تلميذه سليمان بن مهران أعمش العين " أي ضعيف البصر " وقد روى عنهما ابن الجوزي في كتابه ( المنتظم ) : " أنهما سارا في أحد طرقات الكوفة يريدان الجامع ، وبينما هما يسيران في الطريق ، قال الإمام النخعي : يا سليمان ، هل لك أن تأخذ طريقاً وآخذ آخر ؟!! فإني أخشى إن مررنا سوياً بسفهائها ، ليقولون أعور ويقود أعمش ، فيغتابوننا فيأثمون . فقال الأعمش : يا أبا عمران ، وما عليك في أن نؤجر ويأثمون ؟!! فقال النخعي : يا سبحان الله!! بل ( نسلم ويسلمون ، خير من أن نؤجر ويأثمون!! ) ". تأمل يا عبدالله ، إنها قلوب تزيّنت بالإيمان ، حتى حلّقت في السماء ، لتصل بأصحابها إلى أعالي الجنان ، قلوب تشرّبت ووعت حديث النبي صلى الله عليه وسلم : " لايؤمن أحدكم حتى يحب لأخيه مايحب لنفسه " .
இமாம் இப்ராஹிம் நக்யீ (ரஹ்) தாபிஈ (நபித்தோழர்களின் தோழர்) அவர்கள் 49ம் வயதில் மறைந்த மார்க்க மேதை. பிக்ஹு சட்டங்களை வடிவமைத்தவர்களில் முன்னோடி.
அவர்களைப் பற்றி இமாம் இப்னுத் தைமிய்யா அவர்கள் தனது நூலொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்;
இமாம் நக்ஈ அவர்கள் மாறுகண்ணுடையவராக இருந்தார்.அவருடைய மாணவர் ஸல்மான் பின் மர்வான் (ரஹ்) பார்வை குறையுடையவராக இருந்தார்.
ஒருநாள் கூபாவின் தெரு வழியே தன் பார்வை குறையுடைய மாணவரின் கையை பிடித்துக்கொண்டு மஸ்ஜிதிற்கு சென்று கொண்டிருந்த
இமாம் தன் மாணவரை நோக்கி ஸல்மான் "நீங்கள்
வேறு ஒருவரின் துணையோடு மற்றொரு தெருவழியாக வாருங்கள் " என்றார்.
ஏன் இமாம் அவர்களே !என்றார் மாணவர் ஸல்மான்.
நம்மை பார்ப்பவர்கள் நம்முடைய ஊனத்தை சுட்டிக்காட்டி
"ஒரு ஊனம் இன்னொரு ஊனத்திற்கு வழிகாட்டுகிறது எனக் கூறி கிண்டல் கேலி செய்வார்கள்"
என்றார் இமாம்.
" கிண்டல் செய்தாலென்ன அவர்கள் நம்மைப்பற்றி புறம் பேசுவதால் அவர்கள் பாவியாவர்கள்,நமக்கு நன்மை கிடைக்குமல்லவா? " என்றார் மாணவர்
"ஒருவர் பாவம் செய்து அதனால் நமக்கு கிடைக்கும் நன்மையை விட
நாமும் பிறரின் கிண்டல் கேலியிலிருந்து தப்பிப்பதுடன், மற்றவர்களையும் பாவம் செய்ய வாய்ப்பளிக்காமல் தடுப்பது சிறப்பில்லையா?"
என்றார் இமாம் இப்ராஹீம் நக்ஈ (ரஹ்) அவர்கள்.
சுப்ஹானல்லாஹ்!
மேன்மக்கள் மேன்மக்களே!
தான் விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் உண்மையான முஃமினாக ஆக மாட்டான் என்ற நபிமொழியை செயல்வழியில் செய்து காட்டிய மாண்பு,
நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று.
நன்றி கணியூர் இஸ்மாயீல் நாஜி
Comments
Post a Comment