மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற நவீன சாதனங்களில் சேமித்து வைக்கும் புகைப்படங்களின் சட்டம் என்ன?

கேள்வி :

மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற நவீன சாதனங்களில் சேமித்து வைக்கும் புகைப்படங்களின் சட்டம் என்ன?


الجواب بعون الله الملك الوهاب 

ڈیجیٹل تصویر کے بارے میں علمائے کرام کی تین آراء ہیں:


۱۔یہ ناجائز تصویر کے حکم میں داخل نہیں ،
بلکہ پانی یا آئینہ میں دکھائی دینے والے عکس کی مانند ہے،
لہذا جس چیز کا عکس دیکھنا جائز ہے اس کی ویڈیو یا تصویر بنانا اور دیکھنا بھی جائز ہےاور جس چیز کا عکس دیکھنا جائز نہیں اس کی ویڈیو یا تصویر بنانا اور دیکھنا بھی جائز نہیں۔


۲۔اس کا بھی وہی حکم ہے جو عام پرنٹ شدہ تصویر کا ہے ،
لہذا صرف ضرورت کے وقت جائز ہے ۔


۳۔ ڈیجیٹل تصویر بھی اگرچہ اپنی حقیقت کے لحاظ سے تصویر ہی ہے،
البتہ اس کے تصویر ہونے یا نہ ہونے میں چونکہ ایک سے زیادہ فقہی آراء موجود ہیں،اس لیے صرف شرعی ضرورت جیساکہ جہاد اور دین کے خلاف پروپیگنڈوں سے دفاع اور صحیح دینی معلومات کی فراہمی کی خاطر یا اس کے علاوہ کسی واقعی اورمعتبردینی یادنیوی مصلحت کی خاطر ایسی چیزوں اور مناظر کی تصویر اور ویڈیو بنانے کی گنجائش ہےجن میں تصویر ہونے کے علاوہ کوئی اور حرام پہلو 
مثلا عریانیت،موسیقی یا غیرمحرم کی تصاویر وغیرہ نہ ہوں



இன்றைய நவீனமயமான கேமரா மற்றும் மொபைல் மூலமாக எடுக்கப்படும் உருவப்படங்களின் விஷயத்தில் 

தற்கால அறிஞர் பெருமக்களிடத்தில் மூன்றுவித கருத்து பேதங்கள் இருக்கின்றன


*முதலாம் பேதத்தின் படி*


நம் மார்க்கத்தில் ஹராம் என்று சொல்லப்பட்ட உருவத்தை உருவாக்குதல் என்ற அம்சத்தில் இது வராது 

மாறாக இது ஒரு சித்தரிப்பு, பிரதிபலிப்பாகும் 

அதாவது தண்ணீர் கண்ணாடி போன்ற தின் மூலம் வெளிப்படும் பிம்பத்தை போன்றது தான் 
நவீன டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் மூலமாக வெளிபடும் உருவமும் 

எனவே கண்ணாடி போன்ற தின் மூலம் வெளிபடும் உருவத்தின் பிம்பத்தை யாரெல்லாம் பார்ப்பது கூடுமோ 

அவர்கள் நவீன டிஜிட்டல் கேமராவின் மூலமாக எடுக்கப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களை பார்ப்பதும் கூடும் 

அதேபோன்று யாருடைய பிரதிபலிப்பை நிழலுருவை பார்ப்பது கூடாதோ 

அவர்கள் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் வழியாக வெளிப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களை பார்ப்பதும் கூடாது

ஆக கண்ணாடியின் பயன்பாட்டை போன்று இதனுடைய பயன்பாடும் உள்ளது


*இரண்டாம் பேதத்தின் படி*


பிரிண்ட் எடுக்கப்பட்ட உருவங்களின் சட்டத்தை தான் இதற்கும் கொடுக்கப்படும் 

எனவே மிக மிக நிர்பந்த நிலைகளன்றி இதனை பயன்படுத்தலாகாது


*மூன்றாம் பேதத்தின் படி*


மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உருவத்தின் சட்டத்தின் கீழ்தான் டிஜிட்டல் கேமராவின் மூலமாக வெளிப்படும் உருவப்படத்திற்கும் சட்டம் கொடுக்கப்படும் 


ஆகவே மார்க்க தேவைக்காக, 
உலகத்தின் அத்தியாவசிய பயன்பாட்டிற்காக, 
மேலும் அந்த கேமராவின் தேவையின்றி எந்த காரியம் நடக்காதோ அது போன்ற தேவைகளுக்காகவெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் 

அவ்வாறு பயன்படுத்தும் போதும் மார்க்கம் தடை செய்யப்பட்ட அரை குறை நிர்வாண காட்சிகள் ,மற்றும் இசையோடு கலந்த படங்கள், மஹ்ரமற்றவர்களின் படங்கள் போன்றவைகளின் பயன்பாடு அறவே கூடாது...

தரவு செய்க :


ماخذ :دار الافتاء جامعۃ الرشید کراچی

فتوی نمبر :61465

تاریخ اجراء :2018-01-31



دیگر آلات کی طرح موبائل سے بھی بلاضرورت کسی بھی جاندر کی تصویر کھینچنا ناجائز ہے، 

اور تصویر اسکرین پر نہ ہو تب بھی اس کا مواد موبائل میں محفوظ رہتا ہے، 

جو محض کمانڈ سے دوبارہ اسکرین پر نمودار ہوجاتا ہے، 

لہذا جیسے تصویر کھینچنا ناجائز ہے ویسے ہی اسے محفوظ رکھنا بھی جائز نہیں۔

اگرکاروبار یا جاب کے لئے تصویر کھینچے بغیر چارہ نہ ہو تو بوجہ ضرورت جائز ہے، 

اس کا گناہ اس ادارے پر ہوگا، تصویر کھینچنے والا گناہ گار نہ ہوگا۔ واللہ اعلم


எனவே மேற்கண்ட மூன்றாம் கருத்தின்படி 

தேவையில்லாமல் மற்ற சாதனங்களை போல மொபைல் மூலமாகவும் உருவப்படங்களை எடுப்பதும் அதனை மொபைலில் பாதுகாத்து வைப்பதும் அனுமதிக்கப்படாத காரியமாகும் 

மொபைலுடைய வெளித்திரையில் அது தென் படாவிட்டாலும் 

அவர் நாடும் போது அதனை வெளியில் கொண்டுவர முடியும் என்பதினால் 

அத்தியாவசிய தேவையில்லாமல் உருவப்படங்களை பாதுகாத்து வைப்பது அனுமதிக்கப்படாது 

ஏதேனும் வேலையின் நிமித்தமாக உருவப்படங்களின் தேவை ஏற்பட்டால் 

அப்போது அதனை வைத்துக்கொள்பவருக்கு குற்றம் ஏற்படாவிட்டாலும் 

அந்த நிறுவனத்திற்கு அதனுடைய குற்றம் உண்டாகும்


தரவு செய்க :


فتوی نمبر : 143512200010


دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن


موبائل سے تصویر کھینچنا اور کھنچوانا دونوں ناجائز ہے۔ موبائل کی تصویریں بھی شرعاً تصویر کے حکم میں ہیں۔ 


மேற்கண்ட மூன்றாம் கருத்தின்படி 

மொபைலின் மூலமாக போட்டோ எடுப்பதும் எடுக்க வைப்பதும் இரண்டுமே அனுமதிக்கப்படாத ஒன்றாகும் 

மொபைலின் வழியாக வெளிப்படும் உருவப்படங்கள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உருவப்படங்களின் சட்டத்தின் கீழ் தான் வரும் என்பதை அறிந்துகொள்ள கீழ்கண்ட அறிஞர் பெருமக்களின் ஆய்வுத்தொகுப்புகளை பார்வையிடவும்

 
”ڈیجیٹل کیمرے کی تصویر حرمت پر مفصل ومدلل فتوی“ 

موٴلف مفتی سید نجم الحسن امروہوی صاحب 

اور ”ڈیجیٹل تصویر اور سی ڈی کے شرعی احکام“ 

مولانا احسان اللہشائق صاحب۔

واللہ تعالیٰ اعلم

دارالافتاء،
دارالعلوم دیوبند


ویڈیو کالنگ میں موبائل یا لیپ ٹاپ وغیرہ کا جو کیمرہ استعمال ہوتا ہے ، 

وہ عام کیمرہ ہی کی طرح ہوتا ہے اور ویڈیو کالنگ میں پہلے کیمرہ سامنے والے کی تصویر لیتا ہے ، 

اس کے بعد وہ تصویر نہایت تیز رفتاری کے ساتھ برقی ذرات میں تبدیل کرکے دوسری طرف ٹرانسفر کی جاتی ہے، 

چوں کہ یہ عمل نہایت تیز رفتاری سے ہوتا ہے؛ 

اس لیے یہ بات ممکن ہے کہ 
عام لوگوں کے حق میں تصویر کاکیمرے میں اتارا جانا محسوس نہ کیا جائے 


پس جب ویڈیو کالنگ میں تصویر کشی وتصویر سازی پائی جاتی ہے اور احادیث میں تصویر کشی اور تصویر سازی پر سخت وعیدیں وارد ہوئی ہیں


(دیکھئے: مشکوة شریف، باب التصاویر ص ۳۸۵ - ۳۸۷، )

تو موبائل یا لیپ ٹاپ وغیرہ کے کیمرہ کا رخ اپنی طرف یا کسی اور انسان یا جاندار کی طرف کرکے ویڈیو کالنگ کرنا جائز نہ ہوگا،

ہر مسلمان کے لیے اس سے بچنا لازم وضروری ہے ۔ 


மேற்கண்ட மூன்றாம் கருத்தின்படி 

மொபைல் மற்றும் லேப்டாப் வழியாக வீடியோ காலிங் மூலமாக உரையாடல் நிகழ்த்துவதும் அனுமதிக்கப்படாத ஒன்றாகும் 

எனவே மக்கள் வீடியோ காலிங் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் 

முழுமையான விபரம் பெற

கீழ்க்கண்ட ஆய்வுக்கட்டுரையை பார்வையிடவும்:


حضرت مولانا مفتی محمد شعیب اللہ خان صاحب دامت برکاتہم کی کتاب:

ٹیلی ویژن اسلامی نقطہ نظر سے، ص ۵۹ - ۶۶ )


دارالافتاء،
دارالعلوم دیوبند


ஆக மூன்றாம் கருத்தின்படியுள்ள ஆய்வைப் பின்தொடர்பவர்களுக்கு 

மொபைல் மற்றும் கேமரா மூலமாக போட்டோ களை எடுப்பதும் மற்றும் அதனை லேப்டாப், மொபைலில் சேமித்து வைத்துக்கொள்வதும் அனுமதிக்கப்படாத ஒன்று என அறியமுடிகிறது



المحرم هو الصور الثابتة التي يمكن الاحتفاظ بها ، وأما الصور التي تظهر في التلفاز أو الفيديو أو الهاتف المحمول ، فلا تأخذ حكم الصور المحرمة


وہ تصاوير حرام ہيں جو ثابت اور پرنٹ شدہ ہوں اور نظر آئيں جنہيں محفوظ كرنا ممكن ہو، 

ليكن وہ تصاوير جو ٹيلى ويژن يا ويڈيو يا موبائل ميں سكرين پر ظاہر ہوتى ہيں وہ حرام تصاوير كا حكم نہيں ركھتيں



ஆனால் ஒன்றாம் கருத்தின்படியுள்ள கருத்து தான் அனேக அறிஞர் பெருமக்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது 

அதாவது டெலிவிஷன் ,கேமரா, மொபைல், போன்றதின் வழியாக வெளிப்படும் உருவங்கள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உருவத்தின் சட்டத்தின் கீழ் வராது



பார்க்க :

الشرح الممتع ( 2 / 197 ).


والحاصل : 

أن التصوير بالفيديو أو بالهاتف ونقل ذلك إلى الحاسب أو غيره من الأجهزة لا يأخذ حكم التصوير المحرم

فيجوز تصويرها والإبقاء عليها للضرورة إليها


حاصل يہ ہوا كہ: ويڈيو يا موبائل سے تصوير لے كر اسے كمپيوٹر وغيرہ دوسرے آلات ميں داخل كرنا حرام تصوير كے حكم ميں نہيں آتا


ஆக சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் 

வீடியோ கேமரா அல்லது மொபைல் வழியாக போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் பாதுகாத்து வைப்பது மார்க்கத்தில் ஹராமான உருவப்படங்களை பாதுகாத்து வைத்ததின் சட்டத்தின் கீழ் வராது


பார்க்க :


"فتاوى اللجنة الدائمة" (1/458)


‘ஓவியக்கலையின் பரிணாம வளர்ச்சியே புகைப்படக்கலை’ என்று விளங்கும். அறிஞர்களில் சிலர் மட்டுமே 

புகைப்படங்கள் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டவை’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். 

ஆனால் ஹதீஸ் விளக்கத்தில் ஆழ்ந்த ஞானமிக்க அறிஞர்களில் பலர் இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டுள்ளனர்.


‘ஓவியக்கலையின் நவீன வளர்ச்சி தான் புகைப்படக்கலை என்பதை உண்மை என்று வைத்துக் கொண்டாலும் 

அது புகைப்படங்களை கட்டுப்படுத்தாது’ என்பது அவர்களின் நிலைப்பாடாகும், 


ஹதீஸ்களின் வாசக அமைப்பையும், அது சொல்லப்பட்டுள்ள விதங்களையும் சிந்திக்கும்போது மேற்கண்ட கருத்துதான் சரியானது என்பதை புரிந்துக் கொள்ளலாம். 

இதுபற்றி ஒரு தெளிவை பெறுவதற்காக விரிவாக அணுகலாம் 

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் ஒரு போதும் எதிரானதல்ல. 

ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணமாக அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து தான் வந்தனர், 


பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப் படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள்.


உதாரணத்திற்கு

“குர்ஆன் மொழி பெயர்ப்பைத் தமிழில் தருவது ஹராம்” என்று முதலில் தீர்ப்பு வழங்கினார்கள். 

இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. 

அவற்றை மார்க்க அறிஞர் பெருமக்கள் ஏற்றுக் கொண்டனர்.


ஒலி பெருக்கி அறிமுகமான காலத்தில் அது “ஷைத்தானின் கருவி. ஷைத்தானின் கருவியைப் பயன்படுத்துவது ஹராம்” என்றும் அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். 

அதனால் தொழுகைப் பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைப்பதற்குத் தடையாக இருந்தது. 

பின்னர் துணிச்சலுடன் சில அறிஞர்களும் முன்வந்து பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைத்தார்கள். 

இன்று ஒலிபெருக்கி வழியாக அறிஞர் பெருமக்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர்.


தொலைக்காட்சிப் பெட்டி – டிவி அறிமுகமான அந்தக் காலத்தில் “டிவியில் உருவங்கள் வருகின்றன. 

எனவே, ஷைத்தான் பொட்டியான டிவி ஹராமானது” என்று தீர்ப்பு வழங்கினார்கள். 

இந்தக் காலத்தில் அறிஞர்கள் டிவியில் தோன்றி மார்க்கப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இவ்வாறு நவீன கருவிகளுக்கெல்லாம் துவக்கத்தில் எதிர்ப்பும் அவை நடைமுறைக்கு வந்த பின்னர் அவற்றிலுள்ள நன்மைகளைக் கண்டு, 
படு உற்சாகத்துடன் அறிஞர் பெருமக்கள் அதில் பங்காற்றுவதைப் பார்க்கிறோம்.


அந்த வகையில், “உருவப்படம் வரைவது ஹராம்” என்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இன்று விளம்பர சுவரொட்டிகள், பத்திரிக்கை, நோட்டீஸ், கம்ப்யூட்டர், டிவிடிக்கள், இணைய தளங்கள் என அறிஞர்களின் உருவங்கள் பதிவு செய்யப் படுகின்றன. 

கல்விப் பாடங்கள், அறிவியல் கல்வி, சமூக அவலங்கள் என பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பயனுள்ளவைகளை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். 

ஒரு டி.வி.டி யில் லட்சக் கணக்கான உருவப்படங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.


உருவப்படம் ஹராம் என்று சொல்பவர்களாலும் உருவப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்று சொல்லுமளவுக்கு இன்று உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

எனவே, ‘இஸ்லாம் உருவப்படம் வரைதலைத் தடைசெய்துள்ளது’ என்பதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதைத் தடைசெய்வது தொடர்பான நம் அறிவுக்கெட்டிய சில அறிவிப்புகளைப் பார்த்துவிடலாம்.


عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ 

لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةُ تَمَاثِيلَ 

رواه البخاري


எந்த வீட்டில் உருவச்சிலைகளும், நாய்களும் உள்ளனவோ 

அங்கே மலக்குகள் நுழைய மாட்டார்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِذْ أَتَاهُ رَجُلٌ 

فَقَالَ يَا أَبَا عَبَّاسٍ إِنِّي إِنْسَانٌ إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ 

فَقَالَ ابْنُ عَبَّاسٍ لَا أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعْتُهُ يَقُولُ 

مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً وَاصْفَرَّ وَجْهُهُ 

فَقَالَ وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ كُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ 

قَالَ أَبُو عَبْد اللَّهِ سَمِعَ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ مِنْ النَّضْرِ بْنِ أَنَسٍ هَذَا الْوَاحِدَ 


رواه البخاري


சயீத் பின் அபில் ஹஸன் அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்த போது ஒரு மனிதர் வந்து, 

இப்னு அப்பாஸ் அவர்களே! 
நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். 

நான் உருவங்களை வரைகிறேன் எனக் கூறினார். 

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 

யாரேனும் ஒரு உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; 

அவன் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றனர். 

கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். 

அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. 

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், 

உமக்குக்கேடு உண்டாகட்டும்! 

நீர் உருவம் வரைந்து தான் தீரவேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளை வரைவீராக! என்றார்கள், 


حديث أبي هريرة مرفوعا أن النبي صلى الله عليه وسلم قال: 

يقول الله تعالى: في الحديث القدسي 

ومن أظلم ممن ذهب يخلق خلقا كخلقي، فليخلقوا ذرة، أو ليخلقوا حبة


நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். 

அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். 

அப்போது அபூ ஹுரைரா(ரலி), ‘என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? 

அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். 

ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்’ என்றார்கள்… 

(நபிமொழிச் சுருக்கம்,

அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) 

நூல்கள்: 

புஹாரி 5953, 7559; 

முஸ்லிம் 4292, அஹ்மத்).


وما رواه البخاري في صحيحه عن أبي جحيفة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه: 

"لعن آكل الربا وموكله ولعن المصور


வட்டி (வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும், உருவப்படங்களை வரைகின்றவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். 

(அறிவிப்பாளர்:
 அபூஜுஹைஃபா (ரலி) 

நூல்கள்: 

புஹாரி 5962, 
அஹ்மத் 18281).


மேற்கண்ட இது போன்ற அறிவிப்புகள் உயிரினங்களின் உருவ ஓவியம் தீட்டுவதை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கின்றன. 

உருவச் சிலையும், உருவப்படமும், நாயும் உள்ள வீட்டில் நன்மையைக் கொண்டுவரும் வானவர்கள் நுழையமாட்டார்கள் 
எனக் கூறி வீடுகளில் இவற்றைத் தவிர்க்கும்படியும் அறிவிக்கின்றன. 

இந்த அறிவிப்புகளின் கருத்துகளில் ஏறத்தாழ சற்று வார்த்தைகள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. 

இந்த ஆதாரங்களின் அடிப்படைப் படிப்பினையாக,

உருவப்படம் வரைந்தவர் அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார். 

அவரால் உயிர் கொடுக்க இயலாது. 

அதனால் வேதனையும் நீங்காது.

“என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?” என்று அல்லாஹ் கேட்கிறான்.


உருவப் படங்கள் வரைபவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.


உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

ஆகியவற்றை எடுத்துச் சொல்லி “உருவப்படம் வரையக் கூடாது”‘ புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் “புகைப்படம் எடுக்கக் கூடாது” ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை “ஒளிப்பதிவு செய்யக் கூடாது” 

“வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது” எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.


முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் மறுபேச்சுக்கே இடமில்லாமல், உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதற்கும், உருவப் படங்களை பயன்படுத்துவதற்கும் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம். 

ஆனாலும், விதிவிலக்காக வேறு சில அறிவிப்புகளும் உள்ளன அவற்றையும் இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.


عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ 

وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي 

رواه البخاري


நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். 

என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். 

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். 

அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள்”


عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا 
قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ 

فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ 

فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ 

قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ 

قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ 

رواه أبو داود



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக், அல்லது ஹுனைன் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தனர். 

அப்போது காற்று வீசி எனது விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. 

அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவே! 

என்ன இது?” என்றார்கள். என் பொம்மைகள்” என்று கூறினேன். 

அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, 

அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். குதிரை” என்று கூறினேன். 

குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். இறக்கைகள்” என்று பதில் கூறினேன். குதிரைக்கு இரண்டு இறக்கைகளா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க, 

ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?” என்று நான் கேட்டேன். 

இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்குச் சிரித்தார்கள்.



عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ اتَّخَذَتْ عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ 

فَهَتَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّخَذَتْ مِنْهُ نُمْرُقَتَيْنِ فَكَانَتَا فِي الْبَيْتِ يَجْلِسُ عَلَيْهِمَا 

رواه البخاري



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச்சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். 

நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். 

அதில் அவர்கள் சாய்ந்து கொள்பவர்களாக இருந்தனர்”


அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புஹாரி 2479


عن عائشة قالت قدم رسول الله صلى الله عليه وسلم من سفر وقد اشتريت نمطا فيه صورة فسترته على سهوة بيتي 

فلما دخل كره ما صنعت 

وقال أتسترين الجدر يا عائشة فطرحته فقطعته مرفقتين فقد رأيته متكئا على إحداهما وفيها صورة



நான் இதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவப்படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிக்கும் மற்றொரு ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.


عَنْ مُجَاهِدٍ قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام 

فَقَالَ لِي أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَكُونَ دَخَلْتُ إِلَّا أَنَّهُ كَانَ عَلَى الْبَابِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ 

وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ فَمُرْ بِرَأْسِ التِّمْثَالِ الَّذِي فِي الْبَيْتِ يُقْطَعُ فَيَصِيرُ كَهَيْئَةِ الشَّجَرَةِ 

وَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ فَلْيُجْعَلْ مِنْهُ وِسَادَتَيْنِ مَنْبُوذَتَيْنِ تُوطَآَنِ 

وَمُرْ بِالْكَلْبِ فَلْيُخْرَجْ فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِذَا الْكَلْبُ لِحَسَنٍ أَوْ حُسَيْنٍ كَانَ تَحْتَ نَضَدٍ لَهُمْ 

فَأُمِرَ بِهِ فَأُخْرِجَ قَالَ أَبُو دَاوُد وَالنَّضَدُ شَيْءٌ تُوضَعُ عَلَيْهِ الثِّيَابُ شَبَهُ السَّرِيرِ 

رواه أبو داود


சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், 

உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான். 

உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், 

உருவப்படங்கள் உள்ள திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், 

நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள்” என்று ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்கள்” 

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.


அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள் : 

அபூதாவூத், 
அஹ்மத், 
திர்மிதீ


عَنْ عَائِشَةَ قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ 

وَقَدْ سَتَّرْتُ عَلَى بَابِي دُرْنُوكًا فِيهِ الْخَيْلُ ذَوَاتُ الْأَجْنِحَةِ 

فَأَمَرَنِي فَنَزَعْتُهُ و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا وَكِيعٌ بِهَذَا الْإِسْنَادِ وَلَيْسَ فِي حَدِيثِ عَبْدَةَ قَدِمَ مِنْ سَفَرٍ 


رواه مسلم


தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச்சீலை இருந்ததாகவும், 

அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், 

அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.


உருவப் படங்கள் தொடர்பாக மேற்கண்ட இரண்டாம் வகை ஹதீஸ்களின் கருத்துக்களையொட்டி, சற்று முன்-பின் வாசகங்கள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. 

இரண்டாம் வகை ஹதீஸ்களிலிருந்து, எவ்வித மதிப்பும் அந்தஸ்தும் வழங்காமல் சில காரண காரியங்களுக்காக வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கலாம்; 
உருவப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று விளங்க முடிகிறது.


உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள்,டிவி,லேப்டாப்,கம்யூட்டர் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. 

இவை தவிர்க்க முடியாதவை. 

தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றதும், 


எடுத்துக் காட்டாக: பாலர் கல்வியை எடுத்துக் கொள்வோம். 

துவக்கத்தில் குழந்தைகளுக்கு உயிர் எழுத்துகள் கற்றுத் தரப்படுகின்றன. 
அ, அம்மா அல்லது அணில். 
ஆ, ஆடு. 
இ, இலை. 
ஈ, ஈயின் உருவம். 
உ, உரல். 
ஊ, ஊஞ்சல். 
எ, எலி. 
ஏ, ஏணி. 
ஐ. ஐவர். 
ஒ, ஒட்டகம், 
ஓ, ஓடம். 
ஒள, ஒளவையார். 

என குழந்தைகள் மனதில் உயிர் எழுத்துகளைப் பதிய வைக்க பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்களும் வரைந்து காட்டி கல்வி போதிக்கப்படும். 

குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்கள். 

பாடப் புத்தகங்கள் வீட்டில்தான் இருக்கும். 

பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்கள் இருப்பதால் வானவர்கள் வீட்டில் நுழையமாட்டார்கள் என்று சொல்ல மாட்டோம்.


உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு உள்ளது,


ஆக ,
மறைவுக்காக வீட்டின் நுழைவாயிலில் திரைச் சீலையைத் தொங்க விடுகின்றனர். 

வெளியில் நடமாடும் ஆட்களின் பார்வை வீட்டிற்குள் எட்டாமலிருக்க திரைச் சீலை ஒரு மறைவு அவ்வளவுதான். 
அதற்கு துணி மட்டும் போதும். 

அதில் உருவப்படங்களை வரைந்து அலங்கரிப்பது வீட்டின் நுழைவாயிலை மதிப்பு மிக்கதாகக் கருதுவதாகும். 

இது தேவையற்ற அலங்காரம் என்பதுடன் திரைத் துணியில் வரையப்படும் உயிரினங்களின் உருவங்கள் மதிக்கப்படுகின்றன.


உருவப்படங்களின் மீதான இந்த மதிப்பைத்தான் இஸ்லாம் இல்லாமல் ஆக்குகின்றது. 

அதேத் திரைத் துணியைக் கிழித்து தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். 

மிதியடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் 

அல்லது திரைத் துணியைச் சுருட்டி வீட்டில் ஒரு மூலையில் வைத்து விட்டாலும் வானவர்கள் நுழையத் தடையில்லை!


பொதுவாகவே உருவப்படங்களை வரையவேக் கூடாது, வைத்திருக்கவே கூடாது என்பது இஸ்லாத்தின் சட்டமாக இருந்தால் 

உருவங்களை கண்டவுடன் அவற்றை அழிக்கும் வேலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறங்கியிருப்பார்கள். 

தீமையை களைவதில் அவர்கள் தான் முண்ணனியில் இருப்பார்கள், இருக்க வேண்டும் – என்ற உண்மையோடு இந்த நபிமொழிகளை அணுகும் போது ‘வரைவதற்கும், வைத்துக் கொள்வதற்கும் தடை செய்யப்பட்ட உருவங்கள் இவையல்ல’ என்பதை விளங்கலாம்.



பொம்மைகள் என்ற உருவங்கள் உருவாக்கப்பட்டு அவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வீட்டில் இருக்கின்றன. 

அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காண்கிறார்கள் 

‘உருவங்கள் வரைபவரை, உருவாக்குபவரை மறுமையில் இறைவன் தண்டிப்பான்’ என்று தாம் கண்டிக்கும் ஒரு காரியத்தின் வடிவமே தம் வீட்டில் இருக்கிறது. 

அதை பார்த்து, அதுபற்றி கேள்வி கேட்டு, சிரித்து அங்கீகரித்து விட்டு செல்கிறார்கள் என்றால், 

அவர்கள் கண்டித்து எச்சரித்துள்ள உருவங்கள் இவையல்ல என்று விளங்குவதில் மாற்று கருத்து இருக்க முடியாது.


வீட்டு திரை சீலையை நீக்க சொன்னதற்கு காரணம் கூட அதில் பறவை உருவங்கள் இருக்கின்றன. என்பதற்காக அல்ல. 

உலக நினைவை இது அதிகப்படுத்துகின்றது என்பதுதான். 

உலக நினைவை அதிகப்படுத்தும் எதிலும் நாம் ஐக்கியமாகி விடக்கூடாது என்பதற்கான சட்டம்தான் இந்த செய்தியில் அடங்கியுள்ளது.


எனவே மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை இல்லை என்பதே சரியான கருத்தாகும்.


உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்து பாதுகாக்கும் உருவப் படங்கள் இவயெல்லாம் தடுக்கப்படுகின்றன. 

அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். 

ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். 

உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். 

இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.


செய்தித்தாள்களில் காணப்படும் உருவப்படங்கள், பொட்டலம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் உருவப்படங்கள் பொறித்த காகிதங்கள், பொருட்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கு (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. 

இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. 

ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.


அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். 

அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். 

சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.


இன்று பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஓட்டுனர் உரிமம் போன்றவற்றுக்கு புகைப்படம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று மொபைலில் புகைப்படங்கள் சேமித்து வைக்கப்படுகின்றன, 
ரூபாய் நோட்டுக்களில் உருவங்கள் அச்சிடப்படுகின்றன. 

இவைகள் மதிப்பளித்து பாதுகாக்கப்பட்டாலும் உருவப்படம் என்பதற்காக இவற்றை நாம் பாதுகாப்பதில்லை. ஆவணமாகப் பயன்படும் என்பதற்காக அதில் உள்ள தகவல்களுக்காகவே பாதுக்காக்கிறோம்.



أما الصورۃ التي لیس لہا ثبات واستقرار ولیست منقوشۃ علی شیئ بصفۃ دائمۃ،
فإنہا بالظلأشبہ 


ஆகவே எந்தவகையான உருவப்படங்கள் நிலைத்திருக்கும் தன்மையை பெறவில்லையோ, 

அழியாத தன்மையை அடைய வில்லையோ 

அவை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உருவப் படங்களின் சட்டத்தின்கீழ் வராது, 

மாறாக அவைகள் உருவ படத்தின் நிழலின் சட்டமாகவும், கண்ணாடியின் பிம்பத்தின் சட்டமாகவும் கருதப்படும்

எனவே டிஜிட்டல் கேமரா வழியாக, மொபைல் போன்ற சாதனங்களின் மூலமாக வெளிப்படும் புகைப்படங்கள் 

கண்ணாடியில் தெரியும் உருவப் படத்தின் சட்டத்திற்குள் வரும் 

ஆகவே கண்ணாடியை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றோ,

கண்ணாடியை யாரும் பார்க்கக் கூடாது என்றோ சட்டம் இயற்றுவதற்கில்லை


பார்க்க :


مستفاد : (تکملۃ فتح الملہم، باب تحریم صورۃ الحیوان، اشرفیہ دیوبند ۴/۱۶۴)

(فتاوی قاسمیہ ( 24/705)




والله اعلم بالصواب 


பதிவு 
فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ வாட்ஸ் அப் தள

عبد الرحیم انواری 2008
عفا اللہ عنہ 

Comments

Popular posts from this blog

ஸஜ்தா திலாவத் என்றால் என்ன?

தல்கீன் என்றால் என்ன ?

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?